வியாழன், 28 பிப்ரவரி, 2019

யாழ் வாள் வெட்டுச் சம்பவத்தில் தமிழரசுக் கட்சி காவாலிகள் 5 பேர் கைது!!

வாள்வெட்டு வன்முறைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஐந்து பேரையும் பிணையில் விடுவிக்க மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலக்ஸ்ராஜா உத்தரவிட்டார்.

உடுவில் அம்பலவாணார் வீதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் கடந்த வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் புகுந்து 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று  அடாவடியில் ஈடுபட்டது.

3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று வீட்டின் படலையில் போடப்பட்டிருந்த பூட்டை உடைத்து வீட்டுக்குள் நுழைந்து அங்கு யன்னல் கண்ணாடிகள் உள்பட பெறுமதியான பொருள்களை உடைத்து அடாவடியில் ஈடுப்பட்டுவிட்டுத் தப்பிதத்து.

அந்தக் கும்பல் தப்பித்தவேளையில் வீதியில் விபத்து ஒன்றும் இடம்பெற்றது. அதிலிருந்து 8 பேரும் தப்பி ஓடினர்.

ஒருவாரமாக சுன்னாகம் பொலிஸாரால் விசாரணைகள்  முன்னெடுக்கப்பட்டனர். அதனடிப்படையில்
வலி. தெற்கு பிரதேச சபையின் தமிழ் அரசுக்கட்சி உறுப்பினர் அன்ரன் லீனஸ் உள்பட  5 பேர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் 5 பேரும் உடுவில் மல்வத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.

சந்தேகநபர்கள் இன்று மாலை மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலக்ஸ்ராஜா முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

“வன்முறைச் சம்பவத்துக்கு திட்டமிடல. – ஒழுங்கமைத்தல் என பின்னணியில் இருந்த பிரதான சந்தேகநபர் பிரதேச சபை உறுப்பினர். அவரது பின்னணியில் 7 பேர் வன்முறையில் ஈடுபட்டனர்.
மேலும் மூவர் தேடப்படுகின்றனர்” என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.

சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி பிணை விண்ணப்பதை முன்வைத்தார். சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று சட்டத்தரணி மன்றுரைத்தார்.

வழக்கை விசாரணை செய்த மாவட்ட நீதிபதி, விசாரணைகளை துரிதமாக முன்னெடுக்க உத்தரவிட்டதுடன், சந்தேகநபர்கள்கள் ஐவரையும் பிணையில் விடுவித்தார்.

இதேவேளை, உடுவில் அம்பலவாணர் வீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைகளுக்கும் சந்தேகநபர்கள் ஆறு பேருக்கும் தொடர்புள்ளதா? என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.